×

காட்பாடி சென்டர் மீடியனில் சின்னம் வரைந்த அமமுக மீது வழக்கு

வேலூர், மார்ச் 30: காட்பாடி சென்டர் மீடியனில் சின்னம் வரைந்த அமமுக மீது வழக்கு பதிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி வெளியான நாள்முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அதில் சின்னம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நடத்தை விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று வேலூர் அடுத்த காட்பாடியில் வள்ளிமலை கூட்ரோடு பகுதியில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அமமுக கட்சி சின்னம் வரையப்பட்டிந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி சின்னம் வரைந்துள்ளதாக, கட்சியை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ammuka ,Katpadi ,Center ,Median ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...