திருச்சி, மார்ச் 30: திருச்சி கிழக்கு தொகுதி பொதுமக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை கூறி அதிமுக வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர பிரசாரம் செய்து வாக்குகள் சேகாித்தார். அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் நேற்று தொகுதிக்குட்பட்ட உலகநாதபுரம், கல்லுக்குழி, காந்தி தெரு, நேதாஜி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், கடைகளில் வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடம், அதிமுக ஆட்சியில் ரூ.100 கோடியில் சாலைவசதி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துஅடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது என்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிகூறி அதிமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளருடன், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், அவைத்தலைவர் அய்யப்பன், வெல்லமண்டி ஜவஹர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
4 தொகுதிகளில் 2 பேலட் யூனிட் ஒரு வாக்குப்பதிவு கருவியில் 15 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என 16 பொத்தான்கள் இருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 15க்கு மேல் சென்றால், அத்தொகுதியில் 2 வாக்குப்பதிவு கருவிகள் (பேலட் யூனிட்) வைக்கப்படும். அதன்படி திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய நான்கு தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு கருவிகள் இடம் பெறுகின்றன. மற்ற 5 தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு கருவி மட்டும் இடம் பெறுகிறது.