×

அதிராம்பட்டினத்தில் கட்டிட தொழிலாளி மர்ம சாவு

அதிராம்பட்டினம்,மார்ச் 30: அதிராம்பட்டினம் சங்கத்து கொள்ளை பகுதியை பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. அவரது மகன் கர்ணன் என்கின்ற சங்கிலி கருப்பன் (42). இவர் அதிராம்பட்டினம் பகுதியில் கட்டிட தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென்று இறந்துவிட்டார் என்று அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது நண்பர்கள் அவரது உறவினர்களுக்கு மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இறந்தவரின் மனைவி ராணி ராமநாதபுரம் உச்சிப்புளியில் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தையும், ஒரு மகளும் உள்ளனர்.

மாத ஒருமுறை கணவரை வந்து பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில் சங்கிலி கருப்பன் இறந்துவிட்டார் என்று தகவல் கிடைத்தவுடன் அதிராம்பட்டினம் கணவர் வீட்டுக்கு வந்து கணவரை பார்த்த போது இறந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பாக எனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளது என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் அதிராம்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் விசாரணை மேற்கொண்டு கர்ணன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்களும் நண்பர்களும் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியதன் பேரில் விலகி சென்றனர் இறந்தவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Adirampattinam ,
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...