×

புதுகை பஸ் நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்பனை அமோகம்

புதுக்கோட்டை, மார்ச் 30: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளரிக்காய் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், வேலூர், விழுப்புரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன.
இதனால் பேருந்து நிலையத்தில் எப்பொழுதும் பயணிகள் கூட்டம் நிலம்பி வழியும். குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மணப்பாறை ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் பேருந்துகள் வந்து செல்கிறது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் அனைத்து பேருந்துகள் நிற்கும் பகுதியில் பயணிகள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இதனால் பேருந்து நிலையத்தில் முத்திரி பருப்பு, பூ வியாபாரம் என பல வியாபாரத்தில் சிறுவியாபாரிகள் ஈடுபட்டு வருவார்கள். புதுக்கோட்டை திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி மற்றும் சவகங்கை மாவட்டத்தில் விளையும் வெள்ளிரிக்காய்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி கொண்டு வந்து சிறிய கூடைகளில் அடுக்கி வைத்துகொண்டு விற்பனை செய்கின்றனர். வெளியூர் பேருந்துகள் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தவுடன் பேருந்து அருகே சென்று விற்பனையை தொடங்கி விடுகின்றனர். அதிகமாக வாங்கும் பயணிகளுக்கு விலையும் குறைத்து கொடுக்கின்றனர். ஒருசில பயணிகள் தங்களின் வீட்டிற்கு மற்றும் உறவினர்களின் வீட்டிற்கும் சேர்ந்து வாங்கிசெல்கின்றனர்.

போட்டிபோட்டுக்கொண்டு விற்னையில் வியாபாரிகள் ஈடுபடுவதால் வெள்ளரி வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. இது குறித்து வெள்ளரி விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் கூறியதாவது: வெள்ளரிக்காய் சீசன் தொடங்கியுள்ளது. குறிப்பாக காலை, மாலை நேரத்தில் விற்பனை குறைவாகத்தான் நடைபெறும். 11 மணிக்கு மேல் மாலை 5 மணி வியாபாரம் பரபரப்பாக நடைபெறும்.

அதன் பிறகு விற்பனை குறைந்துவிடும். பயணிகள் தங்கள் வீட்டிற்கும், உறவிர்களுக்கும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். நாங்கள் தரமான வெள்ளரியை விற்பனை செய்கிறோம். பயணிகள் ஒன்று வாங்கி சாப்பிட்டுவிட்டு அதிகமாக வாங்கி செல்கின்றனர். இதனால் எங்களுக்கு நாளுக்கு நாள் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு வியாபாரிகளுக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை லாபம் கிடைக்கிறது. இன்னும் வரும் நாட்களில் வெள்ளரிக்காய் விற்பனை அமோகமாக இருக்கும் என்றனர்.

Tags : Pudukai ,
× RELATED மீன்பிடி தடை காலம் அமல்; நாகை, தஞ்சை,...