×

ஆனைக்கட்டி, சிறியூர் பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குசாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

ஊட்டி, மார்ச்29: ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைக்கட்டி, சிறியூர் பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 868 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் 112 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து கடந்த 22ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 3 தொகுதிகளிலும் ெமாத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தேர்தலை முன்னிட்டு ஊட்டி தொகுதி பொது பார்வையாளராக பனுதர் பெஹராவும், கூடலூருக்கு ராகுல் திவாரியும், குன்னூர் தொகுதிக்கு சேர்ந்த சவ்ரவ் பஹாரியும் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஊட்டி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பனுதர் பெஹரா, நேற்று ஊட்டி தொகுதிக்குட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள பதற்றமான வாக்குசாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ள ஆனைக்கட்டி, சிறியூர், வாழைத்தோட்டம் மற்றும் சிங்காரா மாயார் வாக்கு சாவடி மையங்களை ஆய்வு செய்தார். அங்கு அடிப்படை வசதிகள்  செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் மேற்கண்ட பதற்றமான வாக்குசாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிரடி படையினருக்கு கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். மாவனல்லா பகுதியில் நடைபெற்ற வாகன சோதனை மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து சி-விஜில் ஆப், கட்டணமில்லா எண் மூலம் பெறப்படும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Anaikatti ,Siriyur ,
× RELATED ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்க சோதனை