×

ஈஸ்வரன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

சேந்தமங்கலம், மார்ச் 29: சேந்தமங்கலத்தில் சோமேஸ்வரர் சௌந்தரவல்லி அம்மன் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, வரும் 31ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் இருந்து, புனிதநீர் எடுத்து தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடத்தை எடுத்து, சேந்தமங்கலம் பேரூராட்சி முக்கிய வீதி வழியாக கோயிலுக்கு சென்றனர். பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Tags : Tirthakuda ,Eeswaran temple ,
× RELATED சாகோதரர்களிடம் கொஞ்சி விளையாடும்...