அவிநாசி, மார்ச் 26: அவிநாசி (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் நேற்று திருப்பூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமையில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவிநாசி தொகுதி திருமுருகன்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நால்ரோடு சிக்னல் அருகே, துரைசாமிநகர், லிங்கம் தியேட்டர் அருகில், அம்மாபாளையம், குமரன் காலனி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், காமாட்சியம்மன்நகர், நெசவாளர் காலனி, ஜெயம்பேக்கரிஅருகில், உமையன்செட்டிபாளையம், மண்ணுக்குட்டை, ராக்கியாபாளையம், பாலாஜிநகர், தேவராயன்பாளையம், கணியாம்பூண்டி, ஏடி.காலனி, ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது அவருடன், அவிநாசி சட்ட மன்ற தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், திருமுருகன்பூண்டி ஒன்றிய திமுக பொறுப்பாளர் பழனிசாமி, பூண்டி நகர திமுக செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமசாமி, காங்கிரஸ் கட்சி அம்மாபாளையம் பூபதி, விடுதலைசெல்வன், சோழன் உள்ளிட்ட பலர் பங்கேற்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.