×

சரவணம்பட்டியில் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படும்

கோவை, மார்ச் 26: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக பையா (எ) ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் நேற்று சரவணம்பட்டி பகுதியில் 28, 29, 30, 31 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட, அம்மன் நகர், சிதம்பரம் நகர், சரவணம்பட்டி, பெரிய வீதி, பெருமாள் கோவில் வீதி, விநாயகபுரம், கிருஷ்ணாபுரம், ஜனதா நகர், சிவானந்தாபுரம், விசுவாசபும், ரெவின்யூ நகர் ஆகிய பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
 
அப்போது பேசிய அவர், ‘‘தி.மு.க ஆட்சி அமைவதோடு, என்னை வெற்றி பெற செய்தால் சரவணம்பட்டி பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சாக்கடை வடிகால் பிரச்சனை, சாலை வசதிகள், தெரு விளக்கு அமைப்பது மற்றும் தேவையான இடங்களில் சமுதாய கூடங்கள் அமைப்பது போன்ற மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனடியாக செய்து தரப்படும்’’ என வாக்குறுதி அளித்தார். இப்பிரசார பயணத்தின் போது சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சாமுவேல்தாஸ், பகுதி தலைவர் ரகுராமன், திமுகவின் பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல்சாமி, பகுதி பொறுப்பாளர் சிவா (எ) பழனிச்சாமி, சிபிஐ கட்சியின் தொகுதி பொறுப்பாளர் வி.ஆர்.பாண்டியன், மதிமுகவின் விஷ்வராஜ், ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்துவளவன், சிபிஎம் சண்முகம், செல்லக்குட்டி, குட்டி, ஜெகநாதன்,

கொமதேகவின் நாகராஜ், குருசாமி, அசோக், சங்கீத், தேவராஜ் மற்றும் தி.மு.க வின் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், வட்ட கழகச் செயலாளர்கள் வசந்தராஜ், முகம்மது நூர்தீன், கதிர்வேல், ரங்கசாமி மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மனோகரன், கந்தசாமி, சோமசுந்தரம், பொன்விஜயன் மற்றும் பாபு, எஸ்.பி.துரை, ஜோதிமணி, சங்கீத்மணிகண்டன், ரமேஷ் குழந்தைவேல், ஆறுக்குட்டி, அருள்முருகன், கண்ணன், பாலு மற்றும் காங்கிரஸ் கட்சியின் நவீன், ராயல் கண்ணன், முருகேசன், எஸ்.ஆர்.சண்முகம், ராமலிங்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Saravanampatti ,
× RELATED காதலனுடன் கருத்து வேறுபாடு 4வது...