×

மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.3.30லட்சம் பறிமுதல்

மொடக்குறிச்சி, மார்ச்26:  மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட  அரச்சலூரில் பறக்கும் படை அலுவலர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள்  வாகன சோதனையில் ஈடுபட்ட போது காங்கயம் அடுத்த சின்னாய்புதூர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஈரோடு - கரூர் ரோட்டில் சோளங்கபாளையத்தில் சண்முகம் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகில் உள்ள தோட்டாவாடியை சேர்ந்த இசக்கிபாண்டி (22) என்பவர் வந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்து ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்து மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சங்கர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.இசக்கிபாண்டி கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடு வாங்குவதற்காக பணம் கொண்டு வந்துள்ளார்.ஆனால் பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் அவரது பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Modakkurichi ,
× RELATED 300 ஆண்டு பழமையான மயானத்தை இடிக்க...