×

குப்பை இல்லா தொகுதியாக மாற்றுவேன்: பரந்தாமன் வாக்குறுதி

சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் புரைவைசாக்கம், சேத்துப்பட்டு, சூளை, வேப்பேரி, புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். செல்லும் இடமெல்லாம் மக்கள் திமுக தான் ஆட்சிக்கு வரவேண்டும், தொகுதி பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். முக்கியமாக குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை நீண்டகாலமாக உள்ளது, குப்பை சரியாக அள்ளப்படுவடுவதில்லை, எங்கும் சுகாதரமற்ற சூழல் உள்ளது. இவைகளை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த பிரச்னைகள் கண்டிப்பாக தீர்க்கப்படும் என்று பரந்தாமன் வாக்குறுதியளித்தார். மேலும், திமுக தலைவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உள்ளபடி இளைஞர்களுக்கு வேலை, கல்விக்கடன் தள்ளுபடி, குடும்பதலைவிகளுக்கு மாதம் ₹1000 என பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். இவை அனைத்தும் திமுக ஆட்சி வந்ததும் நிறைவேற்றப்படும். அனைவரும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

நேற்று காலை தொமுச ஆட்டோ சங்கத்தினர் பரந்தாமனை சந்தித்து ஆதரவு தெரிவித்து, பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அதனை நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர், திமுக வெற்றிபெற்றதும் நமக்கு நல்லாட்சி தான், அனைத்தும் செய்துதரப்படும் என்றார். இதனைதொடர்ந்து நேற்று மாலை மத்திய சென்னை எம்.பி தயாநிதிமாறன், பரந்தாமனை ஆதரித்து பெரியமேடு பகுதியில் கூடியிருந்த மக்களிடம் பிரசாரம் செய்தார். மக்கள் ஆரவாரமாக வரவேற்று, வழியெங்கும் உற்சாகப்படுத்தினர்.

Tags : Barandaman ,
× RELATED பொதுமக்கள் வசதிக்காக சூளை வழியாக...