திருவில்லிபுத்தூர், மார்ச் 26: திருவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவை ஆதரித்து திமுக கூட்டணி கட்சியினர் 40க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் மகள் திவ்யாராவ் மற்றும் திமுக யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம், நகர செயலாளர் அய்யாவு பாண்டியன் மாவட்ட அவைத்தலைவர் செல்வமணி, காங்கிரஸ் மாவட்ட தலைவர்
ரெங்கசாமி, காங்கிரஸ் நகர தலைவர் வன்னியராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்பி அழகிரிசாமி, முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியினருக்கு பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.