×

சாத்தூர் படந்தால் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்

சாத்தூர், மார்ச் 26: சாத்தூர் நகர பகுதிகளான குருலிங்காபுரம், அண்ணாநகர், பெரியார்நகர், மேலக்காந்தி நகர், கீழ காந்திநகர், நடராஜர் தியோட்டர் ரோடு,ஆண்டால்புரம்,புதுபாளையம் உள்ளிட்ட பகுதியில் அமமுக ேவட்பாளரான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்எல்ஏ தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த பகுதியில் குடிநீர் பிரச்னையை போக்க மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி அமைத்துள்ளேன், பலபகுதிகளில் தார்சாலை, வீட்டிற் குடிநீர் இணைப்பு அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். சாத்தூர் பஸ்நிலையம், தேசிய நெடுஞ்சாலை படந்தால் சந்திப்பில் உயர் மின்கோபுரம் அமைத்துள்ளேன். மேலும் சாத்தூர் படந்தால் சந்திப்பில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இந்த பகுதியில் உள்ள பள்ளிகளின் தரம் உயர்த்த பாடுபடுவேன். வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து சாலை சந்திப்புகளில் உயர் மின்விளக்கு கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடன் அமமுக கட்சி நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தேமுதிக நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Sattur ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது