×

கடமலைக்குண்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை திருட்டு

வருசநாடு, மார்ச் 25: கடமலைக்குண்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. கடமலைக்குண்டு அருகே அய்யனார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் தோட்டத்திற்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டினுள் பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகை திருடு போயிருப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கடமலைக்குண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் மேலப்பட்டியை சேர்ந்த ரவி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு வழக்கில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Katamalaikundu ,
× RELATED கடமலைக்குண்டு அருகே மழைக்கு ஒழுகும் அரசு பள்ளி: மாணவ-மாணவிகள் அவதி