×

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் எஸ்பி ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி, மார்ச் 24: முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் விருப்ப மனு அளிக்கலாம். அவ்வாறு தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படும், மேலும் அவர்கள் தங்களது விருப்பமனுவுடன் வாக்காளர் அட்டையின் நகல் இணைத்து வழங்க வேண்டும்.

தேர்தலில் அவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.  தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், வைகுண்டம் மற்றும்  சாத்தான்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்கள், துணை ராணுவத்தினர்கள் காவல் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் அலைபேசி எண் 83000 06260 தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து விருப்ப மனு அளிக்கலாம். விளாத்திகுளம், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்கள், துணை ராணுவத்தினர்கள், காவல் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி என்பவரை 94981 95709 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். ஓய்வு பெற்ற காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிர்ஜித் மேரியை 94883 23426 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் இது சம்பந்தமாக சந்தேகங்கள் ஏதுமிருப்பின் முன்னாள் படை வீரர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0461 2341248 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Jayakumar ,
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி...