×

போகலூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் முருகேசன் பிரசாரம்

பரமக்குடி, மார்ச் 23:  பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் முருகேசன் போகலூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தென்னவனூர், எட்டிவயல், முகமதியார்புரம், ஆய்ஷாபுரம், செய்யாளூர், வீரகனூர், செஞ்சியேந்தல் உள்ளிட்ட 15 கிராமங்களில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, போகலூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சத்திரக்குடியில் பேருந்துது நிலையம் அமைக்கப்படும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திசைவீரன், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், ஒன்றிய செயலாளர் கதிரவன், ஒன்றிய பொருளாளர் குணசேகரன்,பொதுக்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், தங்கராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் கே. ஓ.ஆர். செந்தாமரைக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் பாதாள பைரவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பின்னால் கனகராஜ், கார்த்திக், பாண்டியன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கார்த்திகை சாமி, போகலூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் விஜயராஜன் உள்
ளிட்ட நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : DMK ,Murugesan ,Pokalur Union ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்