×

₹50 ஆயிரத்தை தவறவிட்டவரிடம் திரும்ப ஒப்படைத்த போலீசார் மகள் சீமந்தத்திற்காக பொருட்கள் வாங்க சென்றபோது

வேலூர், மார்ச் 23: மகள் சீமந்தத்திற்காக பொருட்களை வாங்க சென்றபோது, ₹50 ஆயிரத்தை தவறவிட்டவரிடம் போலீசார் திரும்ப ஒப்படைத்தனர்.
வேலூர் சைதாப்பேட்டை ஓல்டு முனிசிபல் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், கூலி தொழிலாளி. இவர் நேற்று மகள் சீமந்தத்திற்காக பித்தளை பொருட்கள் வாங்குவதற்காக சுருட்டுக்கார தெருவிற்கு சென்றார். அப்போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ₹50 ஆயிரம் கீழே விழுந்துள்ளது. இதையறியாமல் அவர் கடைக்கு சென்றார்.

அங்கு பார்த்தபோது பணம் காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வடக்கு போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, ரவிச்சந்திரனிடம் இருந்து பணம் கீழே விழுந்தது தெரியவந்தது.

அந்த பணத்தை 2 பேர் எடுத்துள்ளனர். உடனே இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, அவர்கள் பணத்தை காவல் நிலையத்திற்கு எடுத்து வர இருந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து. அவர்களிடம் பணத்தை வாங்கி, தவறவிட்ட ரவிச்சந்திரனிடம், போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : Seemandham ,
× RELATED செல்லமாக வளர்க்கும் பூனைக்கு...