×

அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

உடன்குடி,மார்ச்23: பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா தண்டுபத்தில்  நடந்தது. திருச்செந்தூர் அருகேயுள்ள கானம் நகர சமக அவைத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பவனகார்த்திக், அந்தோணிபிரவீன், சதீஷ்குமார், மதன்ராஜ்,  ஜோதிசன், சதீஷ், பார்வதிமுத்து, ராம் உள்ளிட்ட 50 பேர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை தண்டுபத்து திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.

அப்போது மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங், நகர செயலர் ஜான்பாஸ்கர், மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளர் அணி மகாவிஷ்ணு, மகளிரணி ஜெசிபொன்ராணி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, இளங்கோ, மாணவரணி முகைதீன், அமிர்தா மகேந்திரன், அலாவுதீன், கிருஷ்ணகுமார், சிறுபான்மை நல உரிமைப்பிரிவு சிராஜூதீன், கலை இலக்கிய அணி ரஞ்சன்,   மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ்,நகர வர்த்தக ஆணி அமைப்பாளர் அப்துல்ஹமீது, நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சலீம், நகர மாணவரணி அமைப்பாளர் துரைசங்கர், நகர அவைத் தலைவர் திரவியம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், துணை அமைப்பாளர் மனோஜ், ஆன்றிய தகவல் தொழில்நுட்ப அணி பாலமுருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : DMK ,Anita Radhakrishnan ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...