கேடிசி நகர், மார்ச் 23: நாங்குநேரி தொகுதியில் கிராமம், கிராமமாகச் சென்று அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் பரமசிவ ஐயப்பன் நேற்று மூலைக்கரைப்பட்டி, சின்ன மூலைக்கரை, அ.சாத்தான்குளம், பருத்திப்பாடு, புதுக்குறிச்சி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் திறந்த ஜீப்பீல் சென்று வீதி, வீதியாக பிரசாரம் செய்தார். அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வெற்றி பெற்றவுடன் விரைந்து நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.
அமமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாய கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தில் அமமுக மாவட்ட துணை செயலாளர் நயினார், பாளை வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.ராஜா, களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், சிறுபான்மை பிரிவு டொமினிக் சேவியர், பொதுக்குழு உறுப்பினர் அப்பாத்துரை, பிரின்ஸ் சாமுவேல், அரசகுமார், மகளிர் அணி ராம்சன்உமா, தகவல் தொழில்நுட்ப பிரிவு பரமசிவன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.