×

கீழ்வேளூர் அருகே அரசு பஸ் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

கீழ்வேளூர், மார்ச் 23: கீழ்வேளூர் அருகே குடும்ப பிரச்னையில் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடததி வருகின்றனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பட்டமங்கலம் சொட்டால் வண்ணம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்புசெழியன் (53). இவர் திருவாரூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக உள்ளார். தற்போது அன்புசெழியன் குடும்பத்துடன் குடவாசல் வி.ஐ.பி. நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவியிடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 19ம் தேதி குடவாசல் வீட்டில் இருந்து வெளியே சென்ற டிரைவர் அன்பு செழியன் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் சொட்டால்வண்ணத்தில் உள்ள தனது ஓட்டு வீட்டில் நேற்று காலை அன்புசெழியன் தூக்கில் தொங்குவதை அருகில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அன்புசெழியன் மனைவி சத்தியா கீழ்வேளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து பிரேதத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Kizhvelur ,
× RELATED நாகை உழவர்சந்தை கீழ்வேளூரில் 100 நாள்...