×

நாமக்கல்லில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

நாமக்கல், மார்ச் 21: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார், மாவட்டம் முழுவதும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறார்கள். அதன்படி நாமக்கல்லில் 3 வதுமுறையாக நேற்று போலீசார், துணை ராணுவ வீரர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. பூங்கா சாலையில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை நாமக்கல் டிஎஸ்பி காந்தி தொடங்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் துணை ராணுவபடையினர், போலீசார் ஊர்வலமாக சென்றனர். நகரின் முக்கிய வீதிகள்  வழியாகசென்ற இந்த ஊர்வலம் மீண்டும் பூங்கா சாலையை சென்றடைந்தது.

நாமகிரிப்பேட்டை: துணை ராணுவத்தினர் 100 பேர் மற்றும் ராசிபுரம் போலீசார் இணைந்து நாமகிரிப்பேட்டையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் தொடங்கிய அணிவகுப்பு, ஆத்தூர் சாலை, கடைவீதி வழியாக சென்றது. இந்த அணிவகுப்பை ராசிபுரம் டிஎஸ்பி பாலமுருகன் தொடங்கிவைத்தார். இதில் நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Namakkal ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...