காரைக்குடி, மார்ச் 21: காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடுபவர் தேர்போகி வி.பாண்டி. இவர் கடந்த 13ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறை மீறி 15 கார்களில் 2வது பீட்டில் இருந்து செக்காலை ரோடு வழியாக சாகாயமாத சர்ச் வரை ஊர்வலமாக வந்ததாக வி.ஏ.ஓ அபிநயா புகார் அளித்திருந்தார். இதன்படி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குபதிவு செய்துள்ளனர்.