×

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை,மார்ச்21: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் நேற்று, கோவை மாநகராட்சிக்குட்பட்டதும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியுமான காகிதேமில்லத் காலனியில், அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக  ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது போத்தனூர் பகுதி கழக செயலாளர் ரபீக், வட்ட செயலாளர் ஜெயகாந்த் ஆத்துபாலம் காஜா, ஜக்ரியா, யூசுப், ரவி, சுகுமார், அப்பாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் செ.தமோதரன் கூறுகையில், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாநகராட்சியின் ஒரு பகுதியில் உள்ள காகிதே மில்லத் காலனியில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களுக்கு, அதிமுக ஆட்சி காலத்தில் பட்டா வழங்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், இன்னும் ஏராளமான நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும், இலட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுகொள்கிறேன்’  என்றார்.

இதையடுத்து, ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளை, அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன்  சந்தித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். என்றும் நான், இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலனாக இருப்பேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு  ஓடோடி வருவேன், என்றும் அவர் வாக்குறுதி அளித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

Tags : AIADMK ,S. Damodaran ,Kinnathukadavu ,Coimbatore Corporation ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி