×

திமுக வேட்பாளர் ஆவுடையப்பன் சேரன்மகாதேவியில் வாக்கு சேகரிப்பு

நெல்லை, மார்ச் 20: திமுக வேட்பாளர் ஆவுடையப்பன் நேற்று சேரன்மகாதேவி குத்பா முகைதீன் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் வெள்ளாங்குளி, அரிகேசவநல்லூர். அத்தாளநல்லூர், திருவிடைமருதூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் முன்னாள் எம்எல்ஏ வேல்துரை, திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துபாண்டி பிரபு, ராஜகோபால், நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், தொமுச கணேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அபுபக்கர், முஸ்லிம்லீக் மாவட்ட துணைத்தலைவர் கமால்பாட்சா, துணை அமைப்பாளர்கள் செல்வகுமார், வேல்முருகன், ஐயப்பன், பால்மாரி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பழனி, ரமேஷ், ஷாஜகான், ஹைதர்அலி, செய்யதலி, அன்வர்உசேன் பங்கேற்றனர்.

பத்தமடை பஸ்நிறுத்தம் அருகில் ஆவுடையப்பனுக்கு நகர செயலாளர் காதர் தலைமையில் வரவேற்பளித்தனர். அப்போது பத்தமடை பேரூராட்சி முன்னாள் தலைவரும், முன்னாள் அதிமுக நகர செயலாளருமான அல்லாபிச்சை, பொதுக்குழு உறுப்பினர் அண்ணாத்துரை, முன்னாள் கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், தர்மகபீர், செய்யது இப்ராகிம், முன்னாள் நகர செயலாளர் இடியோசை இஸ்மாயில், அகமதுமீரான், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரசாக் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர். பின்னர் பத்தமடையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கணேஷ்குமாரின் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு ஜிந்தா, கரிசூழ்ந்தான், ராஜேந்திரன், துவான்மைதீன், நம்பி, மாலிக் பங்கேற்றனர்.

Tags : DMK ,Audayappan Cheranmakhadevi ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு