×

தேமுதிகவில் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர் அமைச்சர் தங்கமணி வரவேற்றார்

பள்ளிபாளையம்,மார்ச் 20: பள்ளிபாளையத்தில் தேமுதிகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், நேற்று அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பள்ளிபாளையம் நகர தேமுதிக செயலாளர் ஆறுமுகம், அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ், முன்னாள் மாவட்ட பொருளாளர் பூபதி, நகர பொருளாளர் முருகேஷ், நகர துணைச்செயலாளர் தாமோதரன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், வார்டு செயலாளர்கள் தியாகராஜன், சேகர், பழனிசாமி, ராஜா, முருகன், கதிர்வேல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், நேற்று அக்கட்சியில் இருந்து விலகினர். இவர்கள் ஆலாம்பாளைத்தில் உள்ள மின்துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டுக்கு வந்து, அமைச்சருக்கு சால்வை அணிவித்து, தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

தேமுதிகவில் இருந்து விலகிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் தங்கமணி, கட்சியின் வளர்ச்சிக்கும், தனது வெற்றிக்கும் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் வெள்ளியங்கிரி, ஒன்றிய செயலாளர் செந்தில், பேரவை செயலாளர் சுப்ரமணி, நகர துணைச்செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட பிரதிநிதி கண்ணையன், ஆடிட்டர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அமமுக கூட்டணியோடு இணைந்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் பள்ளிபாளையம் தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்திருப்பது, தேமுதிக மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Minister ,Thangamani ,AIADMK ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...