×

தேர்தல் பணிகளை பார்வையிட மத்திய பொது மற்றும் காவல் பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் அலுவலர் தகவல்

சென்னை: தேர்தல் பணிகளை பார்வையிட மத்திய தேர்தல் பொது மற்றும் காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை பார்வையிட மத்திய தேர்தல் மற்றும் காவல் பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு பொது பார்வையாளராக சரிதா பாலா ஓம், பெரம்பூர் தொகுதிக்கு கரண் சிங், திருவிக நகர் மற்றும் எழும்பூர் தொகுதிக்கு ராம், ராயபுரம் தொகுதிக்கு புனீத் அகர்வால், துறைமுகம் தொகுதிக்கு ஷீபா ஜார்ஜ்,

சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதிக்கு ஹரி ஓம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிக்கு ரன்திர் குமார், சைதாப்பேட்டை மற்றும் தி.நகர் தொகுதிக்கு ஜோட்டன் தெந்தூப் லாமா, மயிலாப்பூர் தொகுதிக்கு ஸ்நேகில் குமார் சிங், வேளச்சேரி தொகுதிக்கு சுபாஷ் சந்திரா, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர், எழும்பூர், ராயபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கு காவல் பார்வையாளர்களாக தேவராஜூ, சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி, ஆயிரம்விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகளுக்கு விபுராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொளத்தூர் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் மாற்றம் செய்யப்பட்டு திலிப்குமார் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் மற்றும் திருவிக நகர் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் கிரண்  தொடர்பு எண்: 89255 05044 ஆக மாற்றப்பட்டுள்ளது.

Tags : Central Public ,Observers ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் 158 நுண்...