தரங்கம்பாடி, மார்ச் 19: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் முககவசம் அணியாமல் வந்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தரங்கம்பாடி பகுதியில் பேரூராட்சி சார்பில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.