×

ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம் மகளிர் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்

திருச்செந்தூர், மார்ச் 19: மகளிர் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்து பாடுபடுவேன் என ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்த திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளரான தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உறுதியளித்தார். மதச்சார்பற்ற கூட்டணியில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இதையொட்டி நேற்று முன்தினம்  வேட்பு மனுத்தாக்கல் செய்த அவர், தொகுதி மக்களை சந்தித்து வாக்குசேகரித்து வருகிறார். ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் நேற்று காலை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார். குறிப்பாக திறந்த வேனில் நின்றபடி அழகப்பபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமுத்துவிளை, அழகப்பபுரம், மேற்கு அழகப்பபுரம் மெயின்ரோடு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். குரும்பூர் பஜாரில் அவர் பேசுகையில், சாதி, மதம் பாராமல் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன். மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்து பாடுபடுவேன்’’ என்றார்.

 தொடர்ந்து அவர் அங்கமங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட திண்டுவிளை, அருளானந்தபுரம், மெயின்ரோடு பஜார், பரதர் தெரு, முஸ்லிம் வடக்குதெரு, அன்புநகர் நாலுமாவடி, சுந்தராபுரம், புதுக்கிராமம், சுப்பிரமணியபுரம், கோட்டார்விளை, அண்ணாநகர், அங்கமங்கலம் மற்றும் புறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கரை, முஸ்லிம் வடக்குதெரு, நடுத்தெரு, ஆசாரியார் தெரு, அழகுகாரன் காலனி, பன்னீர்புரம், நெட்டையன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்குசேகரித்தார். மாலை தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளிலும், குருகாட்டூர் ஊராட்சி பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சிகளில் திமுக மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே. ஜெகன்,திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் செங்குழி ரமேஷ், ஆழ்வை ஒன்றிய பொருளாளர் பாதாளமுத்து, ஒன்றியச் செயலளார் நவீன்குமார், குரும்பூர் நகரச் செயலாளர் ராஜன், நல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பரிசமுத்து, அழகப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் பூமாரி பாலமுருகன், ஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ், மாணவர் அணி ராமஜெயம், மாணவர் அணி ரமேஷ், நாசரேத் ரவி, அருள் சாமுவேல், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைச்செயலாளர் கரும்பன், ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Alwarkurichi ,East Union ,
× RELATED பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்டவர் கைது