×

சாத்தான்குளம் அருகே குடும்ப பிரச்னையில் தற்கொலை போலீசுக்கு தெரிவிக்காமல் வாலிபர் உடல் எரிப்பு

சாத்தான்குளம், மார்ச் 19: தூத்துக்குடி  மாவட்டம் சாத்தான்குளம் அருகே சடையன்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் கருப்பசாமி (26). கூலி தொழிலாளியான இவர் குடும்ப பிரச்னையால் கடந்த ஜன.29ம் தேதி விஷம் குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் நாசரேத் தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பிப்.3ல் இறந்தார். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல்  கருப்பசாமி உடலை குடும்பத்தினர் தகனம் செய்தனர். பின்னர் இறப்பு சான்றிதழ் கேட்டு  விண்ணப்பித்தபோது மேற்கொண்ட விசாரணையில் தற்கொலையை மறைத்து உடலை எரித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பழங்குளம் விஏஓ  சிவகாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம், நடவடிக்கை எடுக்குமாறு  போலீசுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் விசாரணையை  நடத்திய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர்  பெர்னாட் சேவியர், வாலிபர் தற்கொலையை மறைத்தல், போலீசுக்கு  தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்தல் ஆகிய குற்றத்தின் கீழ் கருப்பசாமியின்  தந்தை சின்னத்துரை மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.




Tags : Sathankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...