×

ஆண்டிபட்டியில் பரபரப்பு காய்கறி மாலை அணிந்து வந்த சுயேட்சை வேட்பாளர்

ஆண்டிபட்டி, மார்ச் 18: ஆண்டிபட்டியில் காய்கறி மாலை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர், மனுவை தவறாக பூர்த்தி செய்ததால் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர். ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு பகுதியை சேர்ந்தவர் நீதிபதி(41). இவர் சுயேட்சை ேவட்பாளராக மனு தாக்கல் செய்ய நேற்று காய்கறி மாலை அணிவ்து தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தார்.  பின்னர் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான தாசில்தார் சந்திரசேகரிடம் மனுவை அளித்தார் சென்றார். ஆனால், மனு தவறாக நிரப்பப்பட்டிருந்தது. அதனால் மனுவை அதிகாரி திருத்தச்சொன்னர். வேட்புமனுவை சரிசெய்து வருகிறேன் என்று நீதிபதி புறப்பட்டுச் சென்றார். காய்கறி மாலையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளரால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Andipatti ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி