சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், வளாகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். சமீப நாட்களாக தலைமைச் செயலக வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
