பந்தலூர்,மார்ச்16: பந்தலூர் அருகே அய்யன்கொல்லி சன்னக்கொல்லி பகுதியில் கம்பி வலையுடன் கூடிய தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி அய்யன்கொல்லி அருகில் சன்னக்கொல்லி பகுதியில் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் வசித்து வந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை மறு குடியமர்வு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது.இதை தொடர்ந்து அய்யன்கொல்லி சன்னக்கொல்லி பகுதியில் மறு குடியமர்வு செய்து, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது சாலையோரங்களில் மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்படாமல் தடுப்பதற்காக வேளாண் பொறியியல் துறை சார்பில் கம்பி வலையுடன் கூடிய தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணியினை வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) பூபாலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரமான பணிகளை மேற்கொள்ளவேண்டும் என ஒப்பந்ததாரரிடம் அவர் அறிவுறுத்தினார்.