×

சாத்தான்குளம் அருகே வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சாத்தான்குளம், மார்ச் 16:சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் அந்தோணி ஜெயராஜ் (68). ஓய்வு பெற்ற பள்ளி எழுத்தர். இவர் தனது குடும்பத்துடன் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்துக்கு சென்றார். அந்தோணிஜெயராஜின் உறவினரான மரியசுசிலா நேற்று முன்தினம் அந்தோணி ஜெயராஜ் வீட்டிற்கு சென்றபோது வீட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. உடன் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறந்த கிடந்த நிலையில் அதில் பொருட்கள்  சிதறி காணப்பட்டது. உடன் அவர் அந்தோணி ஜெயராஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் தட்டார்மடம் காவல் நிலையத்துக்கு தகவல்  தெரிவித்தார். தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் தலைமையில் போலீசார்  சென்ற பார்த்தபோது பீரோவில் இருந்த 4பவுன் தங்க செயின், அரைபவுன் மோதிரம் மற்றும் ரூ10 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போனது தெரியவந்தது. தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை பதிவு செய்தனர். வேளாண்கண்ணிசென்று நேற்று வந்த அந்தோணி ஜெயராஜ் தட்டர்மடம்  போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

Tags : Sathankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...