×

நாமகிரிப்பேட்டை அருகே வாகன தணிக்கையில் ₹1.25 லட்சம் பறிமுதல்

நாமகிரிப்பேட்டை, மார்ச் 16: முள்ளுக்குறிச்சி - தம்மம்பட்டி சாலையில், நாமகிரிப்பேட்டை அடுத்த உடையார்பாளையம் என்ற இடத்தில், ராசிபுரம் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி சுந்தர பாண்டியன் மற்றும் எஸ்எஸ்ஐ செந்தில்குமார் தலைமையிலான குழுவினர், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். ஆட்டோவில் ₹1.25 லட்சம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லை. விசாரணை அவர் தம்மம்பட்டியை சேர்ந்த அசோகன்(35) என்பதும், சேலத்திற்கு லோடு ஏற்றிச் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், ராசிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர். அவர் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளும்படி, அசோகனிடம் தெரிவித்தார்.

Tags : Namagiripettai ,
× RELATED நாமகிரிப்பேட்டையில் 20 லட்சம்...