×

ஆண்டிபட்டி பகுதியில் அனல் பறக்கும் வெயிலால் மக்கள் அவதி

ஆண்டிபட்டி, மார்ச் 16:  ஆண்டிப்பட்டி பகுதியில் அனல் பறக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தேனி மாவட்டம் மலையும், மலை குன்றுகளும் நிறைந்த பகுதியாகும். பருவமழை பெய்தாலும், உடனடியாக வறண்டு விடக் கூடிய பகுதியில் ஆண்டிப்பட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் சில தினங்களாக வெயிலின் கடுமை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆண்டிபட்டி பகுதியில் உள்ள தேனி-மதுரை நெடுஞ்சாலை, வைகை அணை சாலை, கடை வீதி போன்ற முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால், கடைகளில் வியாபாரமின்றி வியாபாரிகள் தவிக்கின்றனர். கடும் வெயில் காரணமாக, வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் குளிர்பான கடைகள், சாலையோர தர்பூசணி கடைகளில், மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Tags : Andipatti ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி