×

அரியலூர் நகர மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்

அரியலூர், மார்ச் 15: அரியலூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் அன்னல் முகமது நபி விளக்க தொடர் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பளராக மாநில துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், அரியலூர் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் அமர்வதற்கும், நிற்பதற்கும் நிழற்குடை அமைக்க வேண்டும். அரியலூர் நகர மக்களுக்கு போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அரியலூர் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Arrialur ,
× RELATED அரியலூரில் 3 மாத குழந்தையை ரூ.1.80...