×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் உள்ள கடற்கரை திடீரென சுமார் 80 அடி உள்வாங்கியது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் உள்ள கடற்கரை திடீரென சுமார் 80 அடி உள்வாங்கியது பக்தர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலான சுமார் 500 மீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதியில் இந்த இயற்கை நிகழ்வு ஏற்பட்டுள்ளது. கடல் நீர் சுமார் 80 அடிக்கும் மேல் பின்வாங்கியதால், வழக்கமாக தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பாசி படிந்த பாறைகளும், பவளப்பாறைகளும் முழுமையாக வெளியே தெரிந்தன.

இதனால் அலைகளின் சீற்றம் குறைந்து, அப்பகுதி ஒரு குளம் போலக் காட்சியளித்தது. இந்த காட்சியைப் பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், ஆபத்தை உணராமல் பாசி படர்ந்த வழுக்கும் பாறைகள் மீது ஏறி நின்று புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிக்களை எடுக்கத் தொடங்கினர்.

பாறைகளில் பாசி படிந்துள்ளதால் வழுக்கி விழுந்து காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், கோவில் கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் போலீஸார் ஒலிபெருக்கி மூலம் பக்தர்களை எச்சரித்து, பாதுகாப்பான இடங்களில் மட்டும் புனித நீராடுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

கடல்சார் வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, இது ஒரு வழக்கமான இயற்கை நிகழ்வுதான்.ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களிலும் கடலில் ஏற்படும் ஈர்ப்பு விசை மாற்றங்கள் காரணமாக கடல் நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கம்.

 

Tags : Subramaniya Swami Temple ,Thiruchendur ,Tiruchendur ,Nashikhinaru ,Ayya ,Vaigunder ,Avatarpati ,
× RELATED திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...