×

மகாசிவராத்திரியை முன்னிட்டு கிராம கோயில்களில் குலதெய்வ வழிபாடு

திருமங்கலம், மார்ச் 12:  மகாசிவராத்திரியையொட்டி திருமங்கலம் வட்டார கிராம கோயில்களில் குலதெய்வ வழிபாடு நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி சிவாலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தன. திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் யாகசாலை பூஜை, கணபதி ஹோமம் மாலையில் நடந்தது. இரவு 8 மணிக்கு 108 கலாசாபிஷேகமும், 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சொக்கநாதர், மீனாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் திருமங்கலத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் தங்களது உற்றார் உறவினர்களுடன் குலதெய்வ வழிபாட்டில் இரவு முழுவதும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிராமங்களில் உள்ள சின்ன சிறிய கோயில்களில் கூட வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு சிவராத்திரியை பொதுமக்கள் கொண்டாடினர்.

Tags : Mahasivarathri ,
× RELATED மகாசிவராத்திரியையொட்டி வெள்ளிங்கிரி...