சீர்காழி, மார்ச் 12: சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சீர்காழி சட்டமன்ற தனி தொகுதி தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 348 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னர் தாசில்தார் ஹரிதரன் முன்னிலையில் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையை பூட்டி சீல் வைத்தனர். அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.