ஒட்டன்சத்திரம், மார்ச் 11: ஒட்டன்சத்திரம் ஒன்றியம், ரெட்டியபட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் நாகராஜ், முருகன், அம்சவேணி, சித்ரா, சரஸ்வதி, ராஜேஸ்வரி, தீபா உள்ளிட்ட அதிமுகவினர் 26 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மேற்கு மாவட்ட செயலாளர், எம்எல்ஏ அர.சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், நிர்வாகிகள் பெரியசாமி, சின்னச்சாமி, ஆனந்தன், பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.