×

மீமிசல் காவல் நிலையத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

அறந்தாங்கி, மார்ச் 10: அறந்தாங்கியை அடுத்த மீமிசல் காவல் நிலையத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.மீமிசல் காவல் நிலையத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமை வகித்தார். எஸ்.ஐ துரைசிங்கம் முன்னிலை வகித்தார் விழாவில் மீமிசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் அனைவருக்கும் கேக் வெட்டினர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ மற்றும் காவலர்கள் பெண் காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் பெண் காவலர்கள் அனைவருக்கும் சேலை பரிசாக வழங்கப்பட்டது.

Tags : Women's Day ,Mimicel Police Station ,
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்