×

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

 

சென்னை: திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் உடல்நலக் குறைவால் இன்று காலை சென்னையில் காலமானார். குரு பாரதிராஜா காலமான ஒரு வாரத்தில் பாக்யராஜின் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் காலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் உயிர்பிரிந்தது. இதைத்தொடர்ந்து, இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது; பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அவர்களும் பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

 

Tags : H.E. ,EDAPPADI PALANISAMI ,BAGYARAJ ,Chennai ,Bhagyaraj ,Guru Bharatiraja ,
× RELATED வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த...