×

அசெம்பளி கூட அவங்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட் தான் போல.!! காமெடி பண்ணிட்டாருங்க CM – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்தித்தார். அதில் சட்டப்பேரவைக்குள் ஆதாரம் இல்லாமல் முதலமைச்சர் பேசுகிறார். பிரச்சாரங்களில் பேசுவது போன்றும், சினிமா பணியிலும் சட்டப்பேரவைக்குள் பேசியிருக்கிறார். முதலமைச்சரின் அவதூறு கருத்துக்கு பதிலளிக்க அனுமதி கேட்டும் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். நேற்றைய தினம் சட்டப்பேரவையில் எனது குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் ஏன் உடனடியாக பதிலளிக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.

சட்டப்பேரவையை சினிமா ஷூட்டிங் போன்று மாற்றியிருக்கிறார். திமுக மீது பழிபோடுவதை வழக்கமாக இந்த அரசு வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க விஜய் மறுத்து வருகிறார். விவசாயிகளின் போராட்டத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்தியிருக்கிறார். த.வெ.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து முறையாக விஜய் பதிலளிக்கவில்லை. மின்வெட்டு பிரச்சினையில் கூட முதலமைச்சர் விஜய் தெளிவான பதிலளிக்கவில்லை. ஆளுங்கட்சியினர்தான் பெரும்பாலான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் முதல்வன் திட்டம் முடக்கம் குறித்த கேள்விக்கு உரிய பதிலை அரசு அளிக்கவில்லை. இதனையடுத்து 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்ற நான்முதல்வன் திட்டத்தை த.வெ.க அரசு முடக்கியுள்ளது. முதலமைச்சரும் – அமைச்சர்களும் சேர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பை குழைத்து காமெடியாக்கிவிட்டார்கள். சில தவறான தகவல்களை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பதிவு செய்தார். முதலமைச்சர் பேசிய தவறுகளை சுட்டிக்காட்ட எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உண்மைக்கு புறம்பான தகவலை முதல்வர் பேரவையில் பதிவு செய்தார்.

சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் போன்று மாற்றிவிட்டனர். சட்டமன்றத்திற்குள் முதல்வர் விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆளுநர் உரையின் போது மரபை மீறி தேசிய கீதம் இரண்டுமுறை பாடப்பட்டது. பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல் சட்டமன்றத்தில் விஜய் பேசியுள்ளார். பத்திரிகையாளர்களை பார்த்து பயந்து விஜய் ஓடுகிறார். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Udhayanidhi Stalin ,Chennai ,Assembly ,Legislative Assembly ,
× RELATED தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்வு