புதுடெல்லி: சிபிஎஸ்இ இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்திய ஆன்லைன் ஸ்கேன் மதிப்பீட்டு முறை மற்றும் விடைத்தாள் நகல் குளறுபடியால் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஏராளமான மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், சிபிஎஸ்இ தன் எக்ஸ் தளத்தில், “12ம் வகுப்பு விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டு முடிவுகளை வௌியிடும் பணி தொடங்கி உள்ளது.
இதுவரை பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 87 சதவீத முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்களுக்கான முடிவுகளும் அடுத்தடுத்த கட்டங்களில் வௌியிடப்படும். இந்த பணிகள் விரைவில முழுமையாக நிறைவடையும். மாணவர்கள் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் திருத்தப்பட்ட மதிப்பெண்களை சரி பார்த்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.
