கறம்பக்குடி, மார்ச் 9: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய்துறை சார்பில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் புவியரசன் முன்னிலையில் வருவாய் துறையினர் பங்கேற்று பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் வரைந்தனர்.