நெல்லை: நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் கரைகளை சுமார் 59 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த ஏற்பாடு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அறிவிப்பை திருநெல்வேலி மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முன் ஏல ஆலோசனை கூட்டம் ஜூன் 29, 2026 அன்றும், பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 22, 2026 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
