- கத்தரால் கெட்குதா
- சி. மீ
- பிளாஸ்டர்
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- முதல் அமைச்சர்
- விஜய்
- திமுகா எம்.
- மீ. எல். ஒரு
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூட உள்ள நிலையில், வாய் திறங்க சி.எம் என்ற வாசகம் பொறித்த கருப்பு பேட்ஜ் அணிந்தபடி திமுக எம்.எல்.ஏ-க்கள் பேரவைக்கு வருகை தந்துள்ளனர். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், “வாய் திறங்க CM” என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தவெக அரசின் 1 மாத கால ஆட்சியின் லட்சணத்தை எடுத்துரைக்கும் வகையில் திரையில் நாயகன்; தரையில் வில்லன்.. கதறல் கேட்குதா சி.எம், வாயில் ஏதாவது வருமா சி.எம்? என்ற பல சாட்டையடி வாசகம் பொறித்த பதாகைகளுடன் பேரவைக்கு வந்த திமுக எம்எல்ஏ-க்கள், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும் முதல்வர் விஜயின் ஹைலைட் வாசகமான தூய சக்தி என்பதை விமர்சிக்கும் வகையில் தூய சக்தி அல்ல, துயர சக்தி என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தி திமுக எம்.எல்.ஏ-க்கள் முழக்கமிட்டனர். இவை தவிர
சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?
ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?
மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்..
திரையில் HERO இல்ல.. தரையில் ZERO
தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி
தூய சக்தி அல்ல துயர சக்தி
உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் கைகளில் வைத்து கொண்டு முதல்வர் விஜய்க்கு எதிராக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
