×

வாக்கு எண்ணிக்கை மையங்கள் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு

காரைக்குடி, மார்ச் 8:  காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளை அறைகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் குறித்து  ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் பாதுகாப்பு தன்மைகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள் இந்த வளாகத்தில் செயல்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அறைகள் குறித்து பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தவிர பாதுகாப்பு தன்மை குறித்தும் பார்வையிடப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள், வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் ஆணைய அறிவுரைப்படி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி லதா, வருவாய் கோட்டாசியர் சுரேந்திரன், பிஆர்ஓ பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Madhusudhanreddy ,
× RELATED கலெக்டர் மதுசூதன்ரெட்டி தகவல் பள்ளி எதிரில் கொட்டப்பட்ட கழிவு