×

கோட்டக்குப்பத்தில் வழிப்பறி ஆசாமிகள் 2 பேர் கைது

காலாப்பட்டு, மார்ச் 6:  புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம்  சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில்  ஈடுபட்டனர். கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுக்குப்பம் ஐஸ்  கம்பெனிக்கு அருகே ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு நபர்  நின்றிருந்தார். அவர் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.  அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் பெரிய  கோட்டக்குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்த குட்ட ரமேஷ் (எ) பத்மநாபன் (45)  என்பதும், உருட்டுக்கட்டை வைத்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்ய யாராவது  வந்தால் அவர்களை மிரட்டி பணம் பறிக்கலாம், இல்லையென்றால் அவ்வழியாக  செல்வோரை தாக்கி வழிப்பறி செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 இதேபோல், ேகாட்டக்குப்பம்  சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து  பணியில் ஈடுபட்டனர். பெரிய முதலியார்சாவடி இசிஆர் சாலை வழியாக ரோந்து  சென்றபோது, ஒருவர் உருட்டு கட்டையுடன் நின்றிருந்தார். அவரை பிடித்து  போலீசார் விசாரித்த போது, அவர் பெரிய முதலியார்சாவடி பாரதி நகரை சேர்ந்த  கருணாமூர்த்தி மகன் ஐயப்பன் (26) என்பதும், தேர்தல் பிரசாரத்துக்கு  வருவோரை தாக்கி பணம் பறிக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய  வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர்.

Tags : Kottakkuppam ,
× RELATED கோட்டக்குப்பம் ஓரின சேர்க்கை...