நாகர்கோவில், மார்ச் 5: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு:ஜங்ஷன்-நாகர்கோவில் தினசரி சிறப்பு ரயில் மங்களூர் ஜங்ஷன்-சொர்ணூர் ஜங்ஷன் இடையே மார்ச் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சொர்ணூர் ஜங்ஷனில் இருந்து சேவையை தொடங்கும். ரயில் எண் 02659 நாகர்கோவில் ஜங்ஷன்-ஷாலிமார் வாராந்திர சிறப்பு மார்ச் 7ம் தேதி, இரட்டை ரயில்பாதை பணிகள் திருப்பதி-ரேணிகுண்டா பிரிவில் நடைபெறுவதால் காட்பாடி, ரேணிகுண்டா வழியாக திருப்பிவிடப்படுகிறது. இந்த ரயில் காட்பாடி, மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படுகின்ற சித்தூர், திருப்பதி நிலையங்களுக்கு செல்லாது.