×

கண்ணனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருமயம், மார்ச் 5: திருமயம் அருகே விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கண்ணனூர் சுற்றுவட்டார பகுதி கிராம பகுதியில் விளைந்த நெல்லை நேரடியாக அரசுக்கு விற்பனை செய்ய முடியாமல் தனியாரிடம் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கண்ணனூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் விவசாயிகள், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கண்ணனூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ஊராட்சி உறுப்பினர்கள் பிரியாந்த், சரவணன் முன்னிலைவகித்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர் பழனிச்சாமி திறந்து வைத்தார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் முருகையா நன்றி கூறினார்.

Tags : Kannanur ,
× RELATED மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா